உலக செய்திகள்

சாம்பல் புதன்: உக்ரைனில் அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்- போப் பிரான்சிஸ்

சாம்பல் புதன் தினத்தில் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

ரோம்,

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.

அதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடித்து வருகின்றனர். இந்த 40 நாட்கள் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. இந்த தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமை ஆகும். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

இந்நிலையில், திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்கள் நோன்பு மற்றும் அமைதிக்கான நாளான மார்ச் 2, சாம்பல் புதன் தினத்தை உக்ரைனில் அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்பிக்கையுள்ள மற்றும் நம்பிக்கையற்ற அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். வன்முறையின் கொடூரமான தீமைக்கு ஜெபம் மற்றும் உபவாசம் போன்ற கடவுளின் ஆயுதங்களால் பதில் கிடைக்கும் என்று இயேசு நமக்குக் கற்பித்தார் உக்ரைனின் அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம். என கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்