உலக செய்திகள்

மாலி: கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 15 பேர் பலி

மாலி நாட்டில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக பலியாயினர்.

தினத்தந்தி

பமாகோ,

மாலி நாட்டின் பமாகோ நகரில் உள்ள பன்கோனி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த மூன்றடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் இதுவரை 41 பேரை உயிருடனர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை