உலக செய்திகள்

வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 150 பேர் காயம்

வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 150 பேர் காயமடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

புகுஷிமா,

ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் கடந்த சனிக்கிழமை இரவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.3 ஆக பதிவானது. இதன்பின் நேற்று காலை பிரதமர் யோஷிஹிடே சுகா கூறும்பொழுது, புகுஷிமா, மியாகி மற்றும் பிற பகுதிகளில் பலர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது. எனினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என கூறினார்.

வரும் வாரங்களில் நிலநடுக்கம் ஏற்பட கூடிய ஆபத்துகள் உள்ளன என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எதுவும் ஏற்படவில்லை. ஆனால், புல்லட் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை உள்ளிட்ட வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்பட பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புகுஷிமா மற்றும் மியாகி தவிர்த்து டோக்கியோ நகரை ஒட்டிய சிபா, கனகவா மற்றும் சைதமா ஆகிய பகுதிகளிலும் பலர் காயமடைந்து உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு