கெய்ரோ
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் வெள்ளியன்று மாலை வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் திடீரென குண்டு வெடித்தது.
இதில் வியட்நாமைச் சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற சுற்றுலா வழிகாட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து பலனின்றி உயிரிழந்தார்.
பேருந்தின் ஓட்டுநர் உள்பட படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும், பிரமிடின் மாலை நேர விளக்கொளி அலங்காரத்தை இன்னிசையுடன் கண்டு ரசிக்கச் சென்றுகொண்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நடந்தது.