உலக செய்திகள்

நைஜரில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல்; 37 பேர் படுகொலை

நைஜர் நாட்டில் கிராமத்தில் புகுந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 13 சிறுவர்கள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

நியாமி,

நைஜர் நாட்டின் மேற்கே தில்லாபெரி பகுதியில் டேரி-டே என்ற கிராமத்தில் புகுந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 15 முதல் 17 வயதுடைய 13 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயம் அடைந்து உள்ளனர்.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் மீது நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம் என யுனிசெப் அமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டில் இந்த கிராமத்தில் நடந்த 3வது தாக்குதல் இதுவாகும்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு