உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்வு: மக்கள் மகிழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினத்தந்தி

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் 92 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

குறிப்பாக கான்பெர்ரா நகரில் கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை 75 சதவீத இருக்கையுடன் அனுமதிக்கப்படுகிறது. உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் குழு விளையாட்டுகள் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் கான்பெர்ராவில் உள்ள மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து