உலக செய்திகள்

பார்சலோனா: தீவிரவாதிகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கியவர் கைது

ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டோருக்கு எரிவாயு சிலிண்டர்களை அளித்ததாக ஆசாமி ஒருவரை மொராக்கோ காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

மாட்ரிட்

தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டில் தவறுதலாக சிலிண்டர் வெடித்ததில் வீடு சேதமடைந்தது. இருவர் அதில் இறந்தனர். மீதமுள்ளவர்கள் இரு இடங்களில் தாக்குதல்களை நடத்தினர்.

மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் சிலிண்டர் வழங்கியவரை கைது செய்ததாகவும், மற்ரொரு நகரில் தீவிரவாதிகளின் உறவினரை கைது செய்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத செய்தி கிடைத்துள்ளது. ஸ்பெயின் உள்துறை அமைச்சர் சோய்டோ ஸ்பெயின், மொராக்கோ ஆகிய இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆறு தீவிரவாதிகள் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் இறந்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்; அதில் இருவர் நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை