உலக செய்திகள்

ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் அதிகரிப்பு - ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தகவல்

37 ஐரோப்பிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டைத் தலைமையகமாக கொண்ட ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 3,573 பறவைகளுக்கும், 2,464 கால்நடைகளுக்கும் பறவைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்று நோய் 37 ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல ஐரோப்பிய நாடுகளில் கோழி மற்றும் முட்டை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்