லண்டன்,
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். நவம்பர் 13 மற்றும் 14-ந்தேதிகளில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இந்திய-இங்கிலாந்து உறவை கொண்டாடுவதற்காக அவர் வருவதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின்போது, பருவநிலை மாற்றம், நிலைத்த சந்தை, நிலைத்த பொருளாதாரம் ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறியுள்ளது.
நவம்பர் 14-ந்தேதி, இளவரசர் சார்லசுக்கு 71-வது பிறந்தநாள் ஆகும். அதை இந்தியாவிலேயே கொண்டாடுகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, சார்லசுடன் அவருடைய மனைவி இளவரசி கமீலா வரவில்லை. சார்லஸ், நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அவருடன் கமீலா இணைந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் சார்லஸ், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருவது இது 2-வது தடவை ஆகும். மொத்தத்தில், அவர் இந்தியாவுக்கு 10-வது தடவையாக வருகிறார்.
சமீபத்தில், சார்லசின் மூத்த மகன் இளவரசர் வில்லியம், தன் மனைவியுடன் பாகிஸ்தானுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.