Image Courtesy : AFP 
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

காபுல்,

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் பசோல் பகுதியில் இன்று காலை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த படகில் மொத்தம் 26 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு