உலக செய்திகள்

நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் 35 பேர் கொன்று குவிப்பு

நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் 35 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

அபுஜா,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது.

இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், நைஜீரியாவின் போர்னோ மாகாணம் அட்சுங்கா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் பயங்கரவாதிகளை குறிவைத்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் அட்சுங்கா பகுதியில் பதுங்கி இருந்த 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளால் திருடப்பட்ட கால்நடைகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் மீட்கப்பட்டன. மேலும் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பயங்கரவாதிகளுடன் நடந்த இந்த சண்டையில் நைஜீரிய படையினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து