பொலிவியா,
பொலிவியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்படுதலை தடுக்க புது முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. காற்று மாசால் அந்நாட்டின் தலைநகரான லா பாஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தது.
இதனை தடுக்க தற்போது பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக "கேபிள் கார்கள்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைபோல், பொதுமக்கள் தங்களின் தனி வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, அரசு பேருந்துகளில் பயணிக்குமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.