உலக செய்திகள்

சுவீடனில் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் காயம்

சுவீடன் நாட்டில் குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கோத்தன்பர்க்,

சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர். 3 பேர் வரை பலத்த காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

குண்டுவெடிப்பினை தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது. இதனை தொடர்ந்து 100 முதல் 200 பேர் வரை அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.