உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் எம்பி பணியிடை நீக்கம்

கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் கன்சர்வேடிவ் எம்பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லண்டன்,

கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் கன்சர்வேடிவ் எம்பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2-ம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்கள் நாஜி ஜெர்மனியால் கொல்லப்பட்டதற்குப் பிறகு, கொரோனா தடுப்பூசிதான் "மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம்" என்று வடமேற்கு லெய்செஸ்டர்ஷயர் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ பிரிட்ஜென் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரிட்ஜனின் கருத்து "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...