உலக செய்திகள்

துருக்கியில் லாரி மீது பேருந்து மோதல்: 9 பேர் பலி; 30 பேர் காயம்

துருக்கி நாட்டில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 30 பேர் காயமடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

அங்காரா,

துருக்கி நாட்டின் மனிசா மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இஸ்தான்புல் நகரில் இருந்து இஸ்மிர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சோம நகர் அருகே அந்த பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டது.

இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து உள்ளனர்.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். பேருந்தில் மொத்தம் 50 பேர் வரை இருந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்