உலக செய்திகள்

பிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம்

பிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பிரான்ஸ் நாட்டின் போர்டோக் நகரில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 4 பேர் பயணம் செய்தனர். இந்த கார் அங்குள்ள டார்கெட் வீதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். இந்த கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார் டிரைவர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்