உலக செய்திகள்

உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி

உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

கீவ்,

ஸ்பெயின் நாட்டில் இருந்து உக்ரைன் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஆன்டோனோவ் 12 ரக சரக்கு விமானம் உக்ரைனின் லிவிவ் நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர்.

இந்த விமானம் லிவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தை நெருங்கியபோது, திடீரென விமானத்தின் எரிபொருள் காலியானது. இதனால் விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து 1 கி.மீ.க்கு முன் உள்ள காட்டு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது