உலக செய்திகள்

சீன பிரதமர் லி கெகியாங் இந்த ஆண்டு ஓய்வு

சீன பிரதமர் லி கெகியாங் இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறார்.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவில் கடந்த ஆண்டு 2013-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருபவர் லி கெகியாங். இவரது 2-வது ஐந்தாண்டு பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.

இந்த நிலையில் தனது பதவிக்காலம் முடிந்ததும் தான் ஓய்வு பெற உள்ளதாக பிரதமர் லி கெகியாங் அறிவித்துள்ளார். அதிபர் ஜின்பிங்குக்கு பிறகு அதிகாரம் மிக்க தலைவராக அறியப்படும் 66 வயதான லி கெகியாங், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், சீன பிரதமராக எனக்கு இது கடைசி ஆண்டு என கூறினார்.

அந்த நாட்டின் நடைமுறையின் படி ஆளும் கட்சி மற்றும் அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் 2 ஐந்தாண்டு பதவி காலத்துக்கு பின்னர் ஒய்வு பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி பிரதமர் லி கெகியாங் தான் ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். ஆனால் அதிபர் ஜின்பிங் தனது 10 ஆண்டு கால பதவியை முடித்த பிறகும், தொடர்ந்து அதிபராக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்