உலக செய்திகள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சிஐஏ தலைமை அதிகாரி ரகசியமாக சந்தித்ததாக தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்காவின் சிஐஏ தலைமை அதிகாரி ரகசியமாக சந்தித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் மைக் பாப்பியோ வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ரகசியமாக சந்திந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.ஆனால் இது தொடர்பான செய்தி குறித்து பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. ஈஸ்டர் தினத்தன்று இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு