உலக செய்திகள்

பிரேசிலில் ரெயில்கள் மோதல்; டிரைவர் பலி

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரின் வடக்கு பகுதியில் சாவோ கிறிஸ்டோவோ என்ற இடத்தில் ரெயில் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பயணிகள் ரெயில் ஒன்று இந்த ரெயில் நிலையத்துக்கு வந்தது.

ரியோ டீ ஜெனிரோ,

சாவோ கிறிஸ்டோவோ ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பயணிகள் ரெயில், நின்றுகொண்டிருந்த ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அதே சமயம் ரெயில் என்ஜினின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட டிரைவரை மீட்பதில் சிக்கல் எழுந்தது. 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்