உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை எட்டியது

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியது. கொரோனாவுக்கு மேலும் 26 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 335-ஆக அதிகரித்தது.

சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயிலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் எம்.எல்.ஏ.வான இந்து மதத்தை சேர்ந்த ராணா ஹமீர்சிங்குக்கும் நோய் தாக்கி உள்ளது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டியுள்ள தார்பர்கர் மாவட்டத்தில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.