கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷிய தூதரக அதிகாரிகள் 18 பேரை வெளியேற்றிய குரேஷியா அரசு..!!

ரஷிய தூதரக அதிகாரிகள் 18 பேரை குரேஷியா அரசு, அந்நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளது.

தினத்தந்தி

பெல்கிரேட்,

உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷியா மீது, உலக நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதோடு இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, சில நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன.

அந்த வகையில், மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா தங்கள் நாட்டில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணியாற்றி வரும் 18 தூதரக அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து