உலக செய்திகள்

ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக உயர்வு

ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

மலாபோ,

மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்டா நகரில் ராணுவ ஆயுத கிடங்கில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்தது. இந்த சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கினியாவின் பாட்டா நகரில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் தெரிவித்திருந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு