உலக செய்திகள்

டென்மார்க்: ஒமைக்ரான் பாதிப்புக்கு இதுவரை 18 பேர் பலி

டென்மார்க் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

கோப்பன்ஹேகன்,

டென்மார்க் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் ஒமைக்ரான் பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டன. அதன்பின்னர் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இதுவரை நவம்பர் 21ந்தேதி முதல் டிசம்பர் 28ந்தேதி வரையில் மொத்தம் 56 ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் ஸ்டேட்டன்ஸ் சீரம் அமைப்பு ஒமைக்ரான் பாதிப்புகள் பற்றி முதன்முறையாக வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 21ந்தேதி முதல் டிசம்பர் 28ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொடர்புடைய உயிரிழப்புகள் 18 ஆக உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதே காலகட்டத்தில், பிற கொரோனா வகைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 100 ஆக உள்ளன என்றும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு