உலக செய்திகள்

டிஸ்னி நிறுவனத்தில் 28 ஆயிரம் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவனான டிஸ்னி நிறுவனம், அதன் 28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காக்கள் முழுமையாக முடங்கிப்போயுள்ளன.இதனால் அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா பிரிவு தலைவரான ஜாஷ் டி அமாரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனத்த இதயத்துடன் தொழிலாளர்களின் பணிநீக்க அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.

இதனால் அமெரிக்கா டிஸ்னி பூங்காக்களில் பணியாற்றி வந்த 28,000 பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து