உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலியாகினர். #ISTerrorist #Afghanistan

காபூல்,

ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரும் அந்நாட்டில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்கானிஸ்தான் அரசும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளை இலக்காக கொண்டு ஆளில்லா விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் தீவிரவாதிகள் 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு