உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 8 பேர் பலி

நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்தனர்

காபுல்,

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு 10 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் , கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.