உலக செய்திகள்

வங்காளதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் காலை 11.49 மணியளவில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11.49 மணியளவில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிவு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.04 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.