உலக செய்திகள்

இமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டி பகுதியில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

இமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது.

ஷிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாணி பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் காலை 8.07 மணியளவில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.