கெய்ரோ,
எகிப்து நாட்டில் மசூதி ஒன்றின் மீது கடந்த வருடம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 300க்கும் கூடுதலானோர் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியாக ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், 3 மாதங்களில் தீவிரவாதிகளை ஒழிக்கும்படி ராணுவத்துக்கு கடந்த நவம்பரில் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், எகிப்து பாதுகாப்பு படையினர் சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். எகிப்து படையினரின் வான்வழி தாக்குதலில் 60 தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
இந்த தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். 92 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.