உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான பணமோசடி வழக்கை விசாரித்த எப்.ஐ.ஏ. முன்னாள் தலைவர் காலமானார்

பாகிஸ்தானில் பிரதமர், அவரது மகனுக்கு எதிரான பணமோசடி வழக்கை விசாரித்து வந்த எப்.ஐ.ஏ. முன்னாள் தலைவர் இன்று காலமானார்.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பின் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமரானார்.

இவர் மீதும், இவரது மகன் ஹம்சா ஷெரிப் மீதும் பணமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அந்நாட்டின் மத்திய புலனாய்வு முகமையின் இயக்குனராக நியமிக்கப்பட்ட முகமது ரிஸ்வான் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்த ரிஸ்வான் விடுமுறை எடுத்து சென்று விட்டார். இதனை தொடர்ந்து, முகமையின் துணை இயக்குனரான நஜியா ஆம்ப்ரீன் அந்த பதவியை ஏற்றுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகனுக்கு எதிரான பணமோசடி வழக்கை விசாரித்த ரிஸ்வானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவரை லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சையில் பலனின்றி அவர் இன்று காலமானார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து