உலக செய்திகள்

மலாவியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி

மலாவியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.

தினத்தந்தி

பிளண்டைர்,

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக மலாவி நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கின்றன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான பிளண்டைர் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர். 11 பேரை காணவில்லை. ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள், பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், மலாவியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வரை விட்டு விட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு