Image Courtesy: ANI 
உலக செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் நாட்டை விட்டு வெளியேற தடை - கோர்ட்டு உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நாட்டு மத்திய வங்கியின் கவர்னராக இருந்த அஜித் நிவ்ராத் கப்ரால் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். நாடு மிகப்பெரும் இடரில் சிக்கியிருக்கும் வேளையில் அவரது பதவி விலகல் மேலும் பின்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் கவர்னராக கடந்த 2006 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான இவரது முதல் பதவிக்காலத்தின்போது நிர்வாகத்தில் இவர் செய்த தவறுகள் தொடர்பாக கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அஜித் நிவ்ராத் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தார். அத்துடன் இந்த வழக்கில் வருகிற 18-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகவும் அவர் உத்தரவிட்டார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு