உலக செய்திகள்

ஊழல் வழக்கில் கைதான வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு, டாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

டாக்கா,

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 73). இவருக்கு ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகிறார். கலீதா ஜியாவுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை அளிக்க வங்கதேச அரசு நிர்வாகம் மறுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக டாக்கா ஐகோர்ட்டில் வக்கீல் ஜைனல் அபேதின் முறையிட்டார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு தேவையான உயர் சிகிச்சை அளிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அவர், டாக்காவில் உள்ள வங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவரை அந்த மருத்துவமனையின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல் ஹாரூண், மூத்த டாக்டர்களுடன் சென்று பார்த்தார்.

அதையடுத்து கலீதா ஜியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல் ஹாரூண் நிருபர்களிடம் பேசுகையில், அவர் எத்தனை நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதை டாக்டர் குழு தீர்மானிக்கும் என்று கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு