உலக செய்திகள்

முன்பு இசைக்கலைஞர்.. இப்போது ராணுவ வீரர்: போர்க்களத்தில் வயலின் வாசித்த கண்கலங்க வைக்கும் காட்சிகள்

உக்ரைனில் இசைக்கலைஞர் ஒருவர் வயலின் பிடித்த கைகளால் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு ரஷியாவுக்கு எதிராக போரில் ராணுவ வீரராக களம் இறங்கியுள்ளார்.

தினத்தந்தி

கீவ்,

ராணுவத்தில் இணைந்து ரஷியாவுக்கு எதிராக போராடும் உக்ரைனிய இசைக் கலைஞர் ஒருவர் வயலின் வாசிக்கும் வீடியோ இணைய வாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

7 மாதங்களுக்கு முன்பு வரை மகிழ்ச்சியாக வயலின் வாசித்து உக்ரைனியர்களை உற்சாகம் அடையச் செய்து அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர் தெருவோர இசைக்கலைஞர் மொய்சி பொண்டரென்கோ.

ஆனால் இப்போது வயலின் பிடித்த கைகளால் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு ரஷியாவுக்கு எதிராக போரில் ராணுவ வீரராக களம் இறங்கியுள்ளார். போருக்கு மத்தியிலும், போர்க்களத்தில் நின்று மொய்சி மெய்மறக்கச் செய்யும் வகையில் வயலின் வாசித்த வீடியோ காண்போரைக் கலங்க வைத்துள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்