மாஸ்கோ,
ரஷ்யாவின் கிழக்கே அனாடிர் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக அந்நாட்டின் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது.
ஆனால், திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. அதில் பயணம் செய்த 4 பேரும் பலியாகி விட்டனர் என கூறப்படுகிறது.
தொழில் நுட்ப கோளாறால் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்றும், பயிற்சி மேற்கொண்டபொழுது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.