உலக செய்திகள்

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: நான்கு பேர் பலி: ஒருவர் காயம்

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி நான்கு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஷன்ஷி,

வடக்கு சீனாவில் உள்ள ஷன்ஷி மாகாணத்தில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சீனாவின் பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றானா லுஆன் குழமத்தினரால் நடத்தப்படும் இந்தச சுரங்கத்தில் வருடத்திற்கு 1.2 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச சுரங்கத்தில் வாயுக கசிவினால் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...