உலக செய்திகள்

கவுதமாலா நாட்டில் பேருந்து விபத்து; 20 பேர் பலி

கவுதமாலா நாட்டில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

கவுதமாலா சிட்டி,

கவுதமாலா நாட்டில் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில், கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான் நகராட்சி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 9 பேர் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் அந்த பகுதியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்