உலக செய்திகள்

பாகிஸ்தானில் துப்பாக்கி சண்டை: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில், 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணம் பகவல்பூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அந்த பகுதியை முற்றுகையிட்டனர்.

பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு கூறினர். அதை ஏற்க மறுத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் சுட்டனர். துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். 3 பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். அந்த இடத்தில், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் சிக்கின.

சிறுபான்மை ஷியா பிரிவினரின் வழிபாட்டு தலங்களை தாக்கி, கலவரத்தை தூண்டிவிட அந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது