உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தேசிய தொலைக்காட்சி நிறுவனம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே துப்பாக்கி ஏந்திய சில நபர்கள் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் வானொலி நிலையம் மீது இன்று தாக்குதல் நடத்தினர்.

ஜலாலாபாத்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே ஜலாலாபாத் நகர் அமைந்துள்ளது. இங்கு அந்நாட்டின் அரசுக்கு சொந்தமுடைய தேசிய தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதனுடன் வானொலி நிலையமும் அந்த கட்டிடத்திலேயே அமைந்துள்ளது.

இந்நிலையில், அரசு செய்தி தொடர்பு அதிகாரியான அட்டாவுல்லா கோக்யானி என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஆப்கானிஸ்தானின் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அந்த கட்டிடத்தில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்