உலக செய்திகள்

அமெரிக்கா: எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு

அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை விசாவை பயன்படுத்துபவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர்.

இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 செப்டர்ம்பர் 21ம் தேதி 12.01 மணிக்கு முன் (அமெரிக்க நேரப்படி) ஏற்கனவே உரிமம் பெற்ற எச்-1பி விசா வைத்துள்ளவர்கள், ஏற்கனவே எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் எப்-1 விசாவில் இருந்து வேலைக்காக வழங்கப்படும் எச்-1 பி விசாவுக்கு மாறுவதற்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசா வைத்துள்ளவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தாலும் கூடுதல் கட்டணம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்