உலக செய்திகள்

ஹைதி நாட்டின் அதிபர் சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார் - இடைக்கால பிரதமர் தகவல்

ஹைதி நாட்டின் அதிபர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக கூலிப்படையினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அந்நாட்டு இடைக்கால பிரதமர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

போர்ட் டோ பிரான்ஸ்,

ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே 28 பேர் கொண்ட வெளிநாட்டு கூலிப் படையால கொல்லட்டப்பட்டார். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஹைதியில் அசாதரணமான சூழல் நிலவுகிறது

இந்தசூழலில் ஹைதியில் பதற்றத்தை குறைக்கவும், துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா. தங்களது பாதுகாப்பு வீரர்களை அனுப்புமாறு ஹைதி அரசுக் கேட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், ஹைதிக்கு எப்.பி.ஐ. அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஹைதி அரசு விடுத்திருந்தது.

இந்நிலையில் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக கூலிப்படையினரால் அவர் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டதாக இடைக்கால பிரதமர் கிளாடி ஜோசப் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்