உலக செய்திகள்

மங்கோலியாவில் வேகமாக பரவும் பிளேக் நோய்

மங்கோலியாவில் பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது.

தினத்தந்தி

மங்கோலியாவில் கொறித்துண்ணும் வகையை சேர்ந்த மர்மோத் அணில்களின் இறைச்சி சுவையான உணவாக கருதப்படுகிறது. அதனை வேட்டையாடுவது அங்கு தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும் அதனை பலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருகின்றனர். இந்தநிலையில் மேற்கு மங்கோலியாவின் சவ்கான் மாகாணத்தில் ஏராளமான மர்மோத்கள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. இதனால் சில மர்மோத்களின் மாதிரியை எடுத்து நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் பிளேக் நோய் பாதிக்கப்பட்டு அவை இறந்தது தெரிய வந்தது. அங்குள்ள 17 மாகாணங்களில் இது பரவி உள்ளது.

பிளேக் நோய்க்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு ஏற்படும். எனவே அங்கு மர்மோத்களின் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என அந்த நாட்டின் சுகாதார துறை எச்சரித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து