உலக செய்திகள்

அமெரிக்கா வந்தடைந்த விமானத்தில் வெடிகுண்டு என புரளி

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்தடைந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என புரளி பரப்பப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

நியூயார்க்,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஏரோபிளாட் விமானம் ஒன்று புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மர்ம அழைப்பு வந்தது. அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த 250 பயணிகளும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இதன்பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமானத்தில் சோதனையிட்டனர்.

ஆனால், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என்பது தெரியவந்தது. எனினும், இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

விமான நிலையம் முழுவதும் திறந்திருக்கிறது என்றும் காலதாமதமின்றி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் விமான நிலையம் டுவிட்டர் வழியே பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை