உலக செய்திகள்

நான் பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் -ரணில் விக்ரமசிங்கே

நான் பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறேன் என ரணில் விக்ரமசிங்கே கூறி உள்ளார். #RanilWickremesinghe

தினத்தந்தி

கொழும்பு

கொழும்பில் ரணில் விக்ரமசிங்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் பொருளாதார பிரச்சினை மற்றும் மறு சீரமைப்பு பணியில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால்தான் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது.

இந்த தேர்தல் மூலம் மக்களின் மனநிலையை அறிய முடிந்தது. இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு பின்னடைவாக இருந்தாலும் அதை உரிய நேரத்தில் சரி செய்வோம். பிரதமர் என்ற முறையில் எனக்கு அதில் முக்கிய பொறுப்பு உள்ளது.

இலங்கையில் தற்போது கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. நான் பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறேன். ஏற்கனவே அதிபர் மைத்ரி பால சிறிசேனாவை சந்தித்து பேசி விட்டேன். அடுத்த வாரம் அவரை மீண்டும் சந்திக்கிறேன். அப்போது மந்திரி சபையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்