உலக செய்திகள்

இம்ரான்கானுக்கு ஆதரவாக முன்னாள் மனைவி டுவிட்டர் பதிவு

இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும், அவருக்கு ஆதரவாகவும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

தினத்தந்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக சென்றபோது, அந்த நாட்டு துணை ராணுவம் அவரை அதிரடியாக கைது செய்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முன்தினம் இம்ரான்கானுக்கு 2 வாரங்கள் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விடுதலை செய்தது.

இந்த நிலையில் இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும், அவருக்கு ஆதரவாகவும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும் இம்ரான்கானின் விடுதலையை ஆதரித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதை நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை