உலக செய்திகள்

சீனாவில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் பெயரை சொல்லி, பாலியல் பலாத்காரத்தில் இருந்து பெண் ஒருவர் தப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

தினத்தந்தி

பிஜீங்,

சீனாவின் உகான் நகருக்கு அருகே உள்ள ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்துள்ளார். அந்த வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையன் ஒருவன், யியை கத்திமுனையில் மிரட்டி அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளான். திருடும் நோக்கத்துடன் வீட்டுக்குள் புகுந்த அவன், யி தனியாக இருப்பதை அறிந்ததும், பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டான். அவனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ போராடியும், முடியாமல் தவித்த அந்த பெண்ணுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

அவனை தள்ளிவிட்ட யி தொடர்ந்து கடுமையாக இருமினார். இதனால் அவரை பார்த்து திகைத்து நின்ற கொள்ளையனிடம் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அதனாலேயே வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பொய் சொன்னார். இதனால் பதறிய கொள்ளையன் உயிர் பிழைத்தால் போதும் என்று கிடைத்த பொருட்களை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடினான்.

பின்னர் இது குறித்து யி போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பான செய்தி அந்த நாட்டு ஊடகங்களில் வெளியானது. இதனால் போலீசார் தன்னை எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்று அஞ்சிய கொள்ளையன் ஷியாவ் (வயது 25), தனது தந்தையுடன் சென்று போலீஸ் நிலையத்தில் சரணடைந்தான்.

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க சமயோசிதமாக சிந்தித்து, கொரோனா வைரஸ் பெயரை சொல்லி தப்பிய அந்த பெண்ணை பலரும் பாராட்டி உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்