உலக செய்திகள்

மாலத்தீவு விவகாரம் டிரம்ப் , மோடி டெலிபோனில் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு மாலத்தீவு நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். #MaldivesCrisis #Tamilnews

வாஷிங்டன்,

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இரு தலைவர்களும் மாலத்தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மிகுந்த கவலை கொண்டனர் . ஜனநாயக அமைப்பு மற்றும் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இரு தலைவர்களும் பேசினர். இந்திய-பசிபிக் பிராந்திய பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் அப்போது உறுதி கொண்டனர் என்று கூறப்பட்டு இருந்தது.