உலக செய்திகள்

இந்திய மாணவர்கள் வர அனுமதிப்பது பற்றி இந்தியா-சீனா ஆலோசனை

சீனா கொரோனா கட்டுப்பாடுகளை கடுமை ஆக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

தினத்தந்தி

பீஜிங்,

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் கொரோனா பரவ தொடங்கியவுடன், அங்கு படித்துக்கொண்டிருந்த 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் அவசரமாக இந்தியாவுக்கு திரும்பினர். சீனா கொரோனா கட்டுப்பாடுகளை கடுமை ஆக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார்.

இந்திய மாணவர்களை சீனாவுக்கு வர அனுமதிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய தரப்பின் கவலைகளுக்கு சீனா முக்கியத்துவம் அளிப்பதாகவும், விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் வாங் யி கூறினார்.

அதுபோல், இந்தியா-சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குவது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்