ஜெருசலேம்,
எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சியுடன் கூட்டணி வைத்து ஐக்கிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூ அழைப்பு விடுத்தார்.
ஆனால் புளூ அன்ட் ஒயிட் கட்சியின் தலைவர் பென்னி கான்ட்ஸ் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. புதிய அரசை அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ருவென் ரிவ்லின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் புதிய அரசு அமைக்க வரும்படி பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அதிபர் ருவென் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். அதனை நேட்டன்யாஹூ ஏற்றுக்கொண்டார்.
அந்நாட்டின் சட்டத்தின்படி, 28 நாட்களில் நேட்டன்யாஹூ மந்திரிசபையை அமைக்க வேண்டும். அதில் தோல்வியடையும் பட்சத்தில், கால அவகாசத்தை 2 வாரங்களுக்கு நீட்டிக்க அவர் அதிபரிடம் கோரிக்கை விடுக்கலாம். அப்போதும் நேட்டன்யாஹூ மந்திரிசபையை அமைக்க முடியவில்லையெனில், புதிய அரசை அமைக்க வரும்படி வேறொரு கட்சிக்கு அதிபர் அழைப்பு விடுப்பார்.